Thursday, September 19, 2013

சவுதி அரேபியாவில் இந்திய ஹஜ் அலுவலகங்கள்

Indian Haj Office, Makkah



Mr. Abdus Salam
Incharge, Makkah Haj Mission

Indian Haj Mission Makkah
Opp: Qisla Parking, Jarwal, Makkah
Phone:- 02-5603580
Fax:- 02-5427303


haj2
Indian Haj Office, Madinah

Mr. M.A. Shukkur
Incharge Madinah Haj Mission

Behind Enjaz Bank, Siteen St, Madinah
Phone No:-04-8380025
Fax:-04-8387549

Moallims for Haj-2013 

 Makkah Branch & Telephone Numbers
Branch
Area
Telephone No.
Mak Branch 1
Hafayar
0125381438
Mak Branch 2
Ummul Qura
0125496550
Mak Branch 3
Jarwal(T)
0125426580
Mak Branch 4
Jarwal(HS)
0125471539
Mak Branch 5
Shebe Amir (DJ)
0125734553
Mak Branch 6
Ajyad (Q)
0125747156
Mak Branch 7
Misfalah (IK)
0125306205
Mak Branch 8
Azizia (BH)
0125530430
Mak Branch 9
Azizia (MB)
0125664507
Mak Branch 10
Azizia (MB)
0125665781
Mak Branch 11
Azizia (MB)
0125280526
Mak Branch 12
Azizia (AK)
0125299232
Mak Branch 13
Azizia (AK)
0125501743
Thanks: முதுவைஹிதாயத்

Monday, September 16, 2013

சிரியாவில் ஆடு நனைகிறது.அமெரிக்க ஓநாய் கவலைப்படுகிறது

சமீப காலங்களில் அரபுலகத்தில் ஏற்பட்டுவருகிற புரட்சி உலகமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.அரபுலக வசந்தம் என்ற ஒரு சொல்லாடல் அங்கு சர்வாதிகார ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்களுக்கு பயத்தை உண்டுபன்னுகிறது.

ஒரு பத்தாண்டுக்கு முன் வரையும் தங்களின் ஆட்சியாளர்களுக்கு எதிரான சிந்தனை தங்களின் கனவில்கூட வந்துவிடக்கூடாது என கவனமாக இருந்த அம்மக்களின் வாழ்வில் ஒரு புரட்சிப்புயல் வீசத்துவங்கியது. துனிசியா,எகிப்து,லெபனான் எனஅனைத்துநாடுகளையும் அந்த அரபுலக வசந்தப்புயல் ஆக்கிரமிக்கத்துவங்கியது.

அரபியர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்திய இரண்டு ஆண்டுகாலமாக அப்புயல் சிரியாவை மையம் கொண்டுவருவதை நாமறிவோம். மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுடன் ஒப்பிடும்போது, சிரியாவில் ஏற்பட்ட புரட்சி முற்றிலும் வேறுபட்டதாகும். இப்புரட்சி இஸ்லாத்தை மையமாக  கொண்டுள்ளதால் சிரியாவின் புரட்சியை  இஸ்லாமிய புரட்சி என்றே அழைக்கலாம்.

அங்குள்ள மக்கள் பஸ்ஸார் அல் அசதின் ஆட்சிக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி ராணுவத்தினர் ரசாயன குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவ்வாறு தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்றும், சிரியா சிவப்புக்கோட்டை தாண்டிவிட்டது என்றும் அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய மூன்று சாத்தான்கள் மீண்டும் தங்களின் அழிச்சாட்டியங்களை துவக்கப்போகின்றனர்.

உண்மையில் சிரியாவில் நடப்பது என்ன?
மனிதாபிமான காரணங்களை சொல்லி கள்ளத்தனமாக அமெரிக்கா சிரியாவுக்குள் நுழைய முயற்சி செய்துவருவதின் பின்னனி என்ன?
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்கள் 1400 பேரை அஸத் கொலை செய்தார் என்று அமெரிக்கா முன்வைத்த காரணம்.

சிரியா மக்கள் மீது அஸத் ஷைத்தான் தாக்குதலை தொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்து பல லட்சம் மக்கள் அகதிகளாகி வெளியேறி விட்டனர்.அப்பொழுதெல்லாம் வாய் திறக்காத அமெரிக்கா இப்போது வாய் திறக்க காரணம் என்ன?

சிரியாவில் ஆடு நனைகிறது.அமெரிக்கா ஓநாய் கவலைப்படுகிறது.
இவர்களின் மனிதாபிமான இலட்சணத்தை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நாம் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள்.அதை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பார்க்கமுடிகிறது. பஸ்ஸார் ஒரு மாபெரும் கிரிமினல்.சர்வாதிகார ஷைத்தான் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.அஸத் என்ற நஜீஸை சுத்தம் செய்ய அமெரிக்கா என்ற இன்னொரு நஜீஸ் எதற்கு?

நஜீஸை நஜீஸால் சுத்தம் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின்சூட்சுமத்தை,தந்திரத்தை,நரித்தனத்தை இஸ்லாமிய சமூகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், அங்கு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிற போராளிகளான முஜாஹிதீன்களின் கை ஓங்கிவருகிறது. எந்தளவென்றால் அங்குள்ள நிலத்தில் சுமார் 70% அதிகமாக முஜாஹிதீன்கள் கைப்பற்றி விட்டனர்.

மேலும் மேற்கத்திய நாடுகள் கடந்த காலங்களில்  சிரியா அரசுக்கு கொடுத்து வந்த பெரும் ஆயுதங்களும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். சிரியா முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டில் வருவதோடு  நிலையான அரசின் அனைத்து அங்கங்களும் இராணுவ தளங்களையும் அவர்கள் கைப்பற்றும் காலம் நெருங்கிவிட்டது.

கடந்த சில வாரங்களில் புரட்சியாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியும் அமெரிக்காவின் கைப்பாவை அரசான பஸ்ஸாரின் வீழ்ச்சியும் தான் அமெரிக்காவின் போலியான அனுதாபத்திற்கு காரணம் என்பதை முஸ்லிம்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதில் அமெரிக்கா படையெடுப்பின் மூலம் இரண்டு தன்னுடைய இரண்டு திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறது. 
1.மிக வேகமாக முன்னேறிக்கொண்டிரூகின்ற சிரியா போராளிகளை பலஹீனப்படுத்துவது

2.பஸ்ஸாரை வீழ்த்திவிட்டு அந்த இடத்தில் ஒரு பொம்மை அரசை நிறுவுவது.

எனவே இராசாயன ஆயுதம் பயன்படுத்தல், சட்டமீறல் என்பதெல்லாம் வெறும் போலியான குற்றச்சாட்டுக்கள்.ஏனெனில்  வளைகுடாப்போருக்கு முன்பு சதாம் ஹுசைன், குவைத்தை கைப்பற்ற அமெரிக்கா எவ்வாறு அனுமதித்ததோஅதைப்போன்றே அமெரிக்காவின் அனுமதியின்றி கண்டிப்பாக கொடுங்கோலன் பஸார் இரசாயன ஆயுதத்தை பிரயோகித்திருக்க முடியாது.

அமெரிக்காவின் இராணுவ தலையீடு என்பது ஒபாமா சொல்வதைப்போல் அப்பாவி சிரிய மக்களுக்கு உதவி புரிவதற்காக அல்ல. மாறாக இராக், ஆஃப்கானிஸ்தானைப்போல அதையும் சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறில்லை.

இந்தச்சூழலில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சிரியாவை பற்றி முஸ்லிம்கள் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

சிரியா அது அல்லாஹ்வால் பரக்கத் செய்யப்பட்ட பூமியாகும்.
அல்லாஹ் தஆலா மிஃராஜ் பற்றி குறிப்பிடும்போது-
سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்

நபி ஸல் அவர்களால் பரக்கத்திற்காக துஆச்செய்யப்பட்ட பூமியாகும்.
قال عبدالله بن عمرو رضي الله تعالى عنه: صلى بنا النبي عليه الصلاة والسلام ثم أقبل على القوم فقال: "اللهم بارك لنا في مدينتنا، وبارك لنا في مدنا وصاعنا، اللهم بارك لنا في حرمنا، وبارك لنا في شامنا" حديث صحيح.

நபி ஸல் அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.பின்பு கூட்டத்தை முன்னோக்கி, யா அல்லாஹ்! எங்கள் மதீனாவில் பரக்கத் செய்வாயாக! எங்களுடைய முத்து மற்றும் ஸாஃவு விலும் பரக்கத் செய்வாயாக! யா அல்லாஹ்!எங்களின் சிரியா பூமியிலும் பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சிரியாவைப்பற்றி நபி ஸல் அவர்களின் முன்னறிவிப்புக்கள்
உலகில் போர்கள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது.மண்ணுக்காக, பெண்ணுக்காக, ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக ஆனால் சிரியாவில் எல்லா காலத்திலும் ஈமானுக்காக மட்டுமே போர்கள் நடைபெறும்.

சிரியாவில் ஆட்சி வேண்டுமானால் சர்வாதிகார ஆட்சியாக இருக்கலாம்.அங்கு வாழும் மக்கள் ஈமானிய உணர்வு மேலோங்கியவர்கள் எனபதை மறந்து விடக்கூடாது.

சிரியா உண்மையான முஜாஹிதீன்கள் வாழும் பூமி
عن عبدالله بن حوالة رضي الله عنه قال، قال النبي عليه الصلاة والسلام: "ستجدون أجنادًا جندًا بالشام وجندًا بالعراق وجندًا باليمن"، قال عبدالله فقلت: يا رسول خِرْ لي – يعني اختار لي هل أكون بالعراق أم بالشام أم باليمن؟-، فقال عليه الصلاة والسلام: "عليكم بالشام، عليكم بالشام، فمن أبى فليلحق بيمنه، وليسق من غدره؛ فإن الله عز وجل قد تكفل لي بالشام وأهله" رواه أحمد وصححه الألباني.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஹவாலா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். சிரியா படை,ஈராக் படை,  யமன் படை என்று நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள்..என  நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் எதை வசிப்பதற்கு தேர்வு செய்யட்டும் என கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் சிரியாவில் தங்குங்கள்.சிரியாவில் தங்குங்கள் என்றார்கள்.ஏனெனில் அல்லாஹ் சிரியாவையும் அதன் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொருப்பை ஏற்றுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா ஈமான் மற்றும் கல்வி அடைக்கலமாகும் பூமியாகும்.
وقال عليه الصلاة والسلام مبينًا أن أرض الشام هي أرض العلم والإيمان، قال عليه الصلاة والسلام: "إني رأيت عمود الكتاب انتُزع من تحت وسادتي فنظرت فإذا هو عمود ساطع عمد به إلى الشام، ثم قال: ألا إن الإيمان إذا وقعت الفتن في الشام" أخرجه الحاكم وصححه الألباني.

என் தலையனைக்கு கீழ் இருந்த வேதத்தின் கழட்டப்பட்டு சிரியாவில் அது ஜொலிப்பதாக காண்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள். ஈமானுக்கு சோதனை வந்தால் அது சிரியாவில் போய் ஒளிந்து கொள்ளும் என்றார்கள்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நாளை மஹ்ஷர் பூமியும் அந்த சிரியாதான். சுவனத்தின் பொருட்களை காண வேண்டுமானால் மக்காவுக்கும் மதீனாவுக்கும் செல்லவேண்டும். நாளை மஹ்ஷர் மைதானத்தை காண வேண்டுமானால் சிரியா செல்ல வேண்டும்.ஆம்! அது தான் நாளை மஹ்ஷர் களம்.
في حديث أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال: قال عليه الصلاة والسلام: "الشام أرض المحشر والمنشر" رواه أحمد وهو صحيح.

சிரியா மஹ்ஷர் பூமி என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وعن معاوية بن حيدة قال: إن النبي عليه الصلاة والسلام أخبرنا فقال: "إنكم تحشرون رجالاً وركبانًا، وتجرون على وجوهكم ها هنا "قال: وأومأ بيده نحو الشام. صححه الألباني.

நீங்கள் நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன் பக்கம்  இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என்று தம் கையால் சிரியாவை சமிக்கை செய்தார்கள்.

وعن فهد بن حكيم عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قيل له: يا رسول الله أين تأمرني ؟ الجد سأل النبي صلى الله عليه وسلم، أين تأمرني؟ أين أسكن؟ إلى أين أسكن؟ قال "هاهنا" وأومأ بيده نحو الشام. قال: "إِنّكُمْ محْشورُونَ رِجَالاً وَرُكْبَاناً ومجرون علَى وُجُوهِكُم". أخرجه الإمام أحمد وصححه الألباني.

இவ்வாறு ஒருவர் தான் எங்கு வசிப்பது?என  நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது,சிரியாவை சுட்டிக்காட்டினார்கள்.ஏனெனில் நீங்கள் நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன் பக்கம்  இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وسئلت جارية لعبد الله بن عمر رضي الله تعالى عنهما قالت له: اشتد عليّ الزمان وإني أريد أن أخرج إلى العراق -يعني أن تسكن في العراق- فقال لها ابن عمر: فهلا إلى الشام أرض المنشر. رواه الترمذي وصححه الألباني.

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்களின் அடிமைப்பெண் தன் எஜமானரான இப்னு உமர் ரலி அவர்களிடம்  தனக்கு நெருக்கடியாக இருக்கிறது,எனவே இராக் செல்ல நாடுகிறேன் என்றதும் நீ சிரியாவுக்குச்செல் அது தான் மஹ்ஷர் பூமி என்றார்கள்.

கியாமத்தின் நெருக்கத்தில் வெளிப்படும் நெருப்பிலிருந்து தப்பிக்கவே சிரியாவே அடைக்களம்
وعن سالم بن عبدالله عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال: "ستخرج نار في آخر الزمان من حَضْرمَوْت تحشر الناس" قلنا: بما تأمرنا يا رسول الله ؟ - ماذا تأمرنا استعدادًا لخروج هذه النار، ماذا تأمرنا استعدادا لقرب قيام الساعة؟ - فقال عليه الصلاة والسلام: " عليكم بالشام.. عليكم بالشام" صححه الألباني ورواه الإمام أحمد.

ஸாலிம் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கியாமத்தின் நெருக்கத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி ஸல் அவர்கள் கூறியபோது- அப்போது நாங்கள் எங்கு தங்கட்டும்?என நாங்கள் கேட்டோம்.அதற்கு ஸல் அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள் என்று கூறினார்கள்
நபி இப்ராஹீம் அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமி.

عن عبدالله بن عمرو رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: "ستكون هجرة بعد هجرة، فخيار أهل الأرض ألزمهم مهاجر إبراهيم -يعني الشام- قال: ويبقى في الأرض شرار أهلها تلفظهم أرضوهم وتقذرهم نفس الله، وتحشرهم النار مع القردة والخنازير". رواه أبو داوود وصححه الألباني.

ஹிஜ்ரத்துக்கு பின் ஹிஜ்ரத் தொடர்ந்து நடைபெறும்.இறுதியில் நல்லவர்கள் யாவரும் இப்ராஹீம் அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமியான சிரியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அடைக்கலமாகி விடுவார்கள்.    பூமியில் கெட்டவர்கள் மட்டும் வசிப்பர்.அவர்களை நெருப்பு துரத்தும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட பூமி
ومن حديث عبدالله بن حوالة في رواية من هذا الحديث قال عليه الصلاة والسلام: "عليك بالشام فإنها خيرة الله من أرضه" يعني اختاره الله من أرضه "يجتبي إليه خيرته من عباده" رواه أبو داود وهو حديث صحيح

சிரியாவை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அது அல்லாஹ் தேர்வு செய்த பூமியாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா தஜ்ஜால் அழிந்து நாசமாகும் பூமி

ويأتي المسيح من قبل المشرق -يعني المسيح الدجال- وهمته المدينة حتى إذا جاء دبر أحد تلقته الملائكة، فضربوا وجهه قبل الشام هنالك يهلك.. هنالك يهلك"كررها هو بأبي وأمي صلوات ربي وسلامه عليه.. ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه. رواه الترمذي.
கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

இறுதி யுத்த பூமி.
وفي رواية قال عليه الصلاة والسلام:
"يوم الملحمة الكبرى فسطاط المسلمين بأرض يقال لها الغوطة فيها مدينة يقال لها دمشق خير منازل المسلمين يومئذ" رواه أبو داوود وصححه الألباني.

முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் நடைபெறும் இறுதி மாபெரும்  யுத்தம் அந்த சிரியா பூமியின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள கவ்தா எனும் நகரத்தில் நடைபெறும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தஜ்ஜாலின் கதையை முடிப்பதற்காக இந்த பூமியி ஹழ்ரத் ஈஸா அலை அவர்கள் இறுதிகாலத்தில் இந்த பூமியில் இறங்குவார்கள் என்பது நாம் அறிந்ததே!

அவர்கள் இறங்கும் பூமி சிரியாவின் தலை
நகரான டமாஸ்கஸில் தான்.
عن النواف بن سمعان قال سمعت النبي صلى الله عليه وسلم يقول: "ينزل عيسى ابن مريم عند المنارة البيضاء شرقي دمشق" رواه الإمام مسلم.

ஈஸா அலை அவர்கள் கிழக்கு திமிஷ்கில் உள்ள ஒரு வெள்ளை மினாராவில் இறங்குவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா மலக்குமார்கள் இறக்கை விரித்திருக்கும் புனித பூமியாகும்.
நபி ஸல் அவர்களின் ஆட்சியில் சிரியாவுக்கான பொருப்பில் ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் அமர்த்தப்பட்டார்கள்.
          அன்றைய இஸ்லாமிய நாடுகளில் பெரும் பலம் பொருந்திய வல்லரசாக சிரியா செயல்பட்டது.அப்படிப்பட்டவரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சிரியாவின் பாரம்பரியம் தெரியாமல் அமெரிக்கா தன் விஷச்செடியை அந்த பூமியில் நட்டத்துடிக்கிறது.

அவர்கள் தஜ்ஜாலுக்கே சமாதி கட்டுபவர்கள்.

அவர்கள் சத்தியவழியில் ஸ்தரமாக காலூன்றி நிற்பவர்கள்.
அமெரிக்க அழிச்சாட்டிய கூட்டணியின் கொட்டம் அங்கு தான் அடக்கப்பட வேண்டுமென்றால் அதை ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

Wednesday, September 11, 2013

தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும்!

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 
தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்வெல்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 
அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 
வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.
முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. 
தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 
நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 
நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.
ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.
அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகி விட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்பு தாது அதிகமாகி விட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்து விட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.
மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

Sunday, September 8, 2013

ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க நெருக்கடியால் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த நாடுகள் அதை வேறு நாடுகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், ஈரானுக்கு டாலர்களை வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உத்தரவால், கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி மூலமாக ஈரானுக்கு ரூபாயாகத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது. இந்த ரூபாயை ஈரானால் சர்வதேச சந்தையில் பயன்படுத்த முடியாது. இதனால் இந்த ரூபாய்கு இணையான உணவுப் பொருட்கள், மருந்துகள், ரயில்வே என்ஜின்கள், ரயில் பெட்டிகளை இந்தியாவிடம் இருந்து ஈரான் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று இந்திய சந்தையில் டாலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. இந்த வகையில் டாலர்களை சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவை மிச்சப்படுத்தவும் அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு புதிய யோசனையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.
 ஈரானுக்கு டாலர்களுக்குப் பதிலாக ரூபாயைத் தந்தே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியும் என்பதால், அந்த நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவை அதிகரிக்கலாம் என்கிறார் மொய்லி.
இந்த ஆண்டில் இதுவரை ஈரானிடம் இருந்து இந்தியா 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இன்னும் நமக்குத் தேவைப்படும் எண்ணெய்யில் 11 மில்லியன் டன்னை ஈரானிடம் இருந்தே வாங்கினால் நமக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரானிடம் இருந்து 13 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. அதே அளவை இந்த ஆண்டும் ஈரானிடம் இருந்தே வாங்கினால், பணம் மிச்சமாகும். இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் மொய்லி நேரடியாகவே பேசியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஈரானுடன் தயங்கித் தயங்கி மிகச் சொற்பமான அளவிலேயே இந்தியா வர்த்தம் செய்து வருகிறது. இந் நிலையில் ஈரானுக்கு பெரும் லாபம் கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான வர்த்தகத்தில் இந்தியா இறங்கினால் அது அமெரிக்காவை பகைத்துக் கொண்டது போலாகிவிடும் என்பதால் மன்மோகன் சிங் தயங்குவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் முதலில் ஈரானுடனான தூதரக உறவை சீராக்க வேண்டிய வேலையும் மத்திய அரசுக்கு உள்ளது. இராக்கில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு தனது கடல் எல்லைப் பகுதியைக் கடந்து சென்ற இந்திய டேங்கர் கப்பலை சமீபத்தில் ஈரான் சிறை பிடித்தது. தனக்கு 6 மில்லியன் டாலர் வரை வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் கூறிவிட்டது.
அதே நேரத்தில் ஈரானுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைப்பது அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இதைச் செய்யாவிட்டால் பல ஆயிரம் கோடிகள் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும்.
இதனால் மொய்லி சொல்வதைப் போல ஈரானில் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து டாலர்களை மிச்சப்படுத்தி ரூபாய் மதிப்பு மேலும் சரிவதைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார் ப.சிதம்பரம். மொய்லிக்கு முன்னதாகவே சிதம்பரம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், ஐ.நா. பொருளாதாரத் தடைகள், அமெரிக்க உறவை கருத்தில் கொண்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

Wednesday, September 4, 2013

மாணவர்கள் பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ள ஆக., 26 முதல் செப்.7 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யும் பணி, ஆக., 26 முதல் நடக்க உள்ளது. இதன்படி மதிப்பெண் சான்றிதழில், பெயர், இன்ஷியல் பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக, தேர்வுத் துறையின் சுற்றறிக்கை:

சில பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது பெயர், இன்ஷியல், பிறந்த தேதி போன்ற விவரங்களை தவறாக கொடுக்கின்றனர். இதனால், 10ம் வகுப்பு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்படுகிறது. உயர் கல்விக்கு செல்லும் போது சிக்கல் ஏற்பட்டு அதை சரி செய்ய தாமதம் ஆகிறது. இதைத் தவிர்க்க மாணவரிடம், உறுதி மொழி சான்றிதழ்
படிவம் அளிக்கப்படும். அதில் பெயர், இன்ஷியல் உள்ளிட்ட சரியான விவரங்களை எழுத வேண்டும் படிவத்துடன் பிறப்பு, ஜாதிச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். இப்படிவத்தை ஆக., 26 முதல் செப். 7க்குள் தலைமை ஆசிரியரிடம் பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

Tuesday, September 3, 2013

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்
.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசி’ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, “குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், “பென்சன் ராஜாக்கள்” என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. 

விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்” என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன். திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது. அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
 
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக்காலனியாதிக்க வாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.” இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன. “நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”