Thursday, August 15, 2013

தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்!

தங்கவிலை இயக்கம் ஒரு மந்தகரமான நிலையை அடைந்ததன் விளைவாக, கடந்த 12 வருடங்களில் ஏற்படாத ஒரு விலை வீழ்ச்சி இந்த வருடத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் க்குவான்டிடேடிவ் ஈஸிங்க் 3 (QE3) குறைவதற்கும், அதிகளவில் டிமான்ட் குறைவதற்கும் வழிவகுக்கும்

ரிசர்வ் வங்கியில் இருந்து வெளிவந்த கருத்துக்கள் மற்றும் வலுவான அமெரிக்க பொருளாதார தரவு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது QE3 டேப்பரிங்க் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.

"ஜூலையில் வேலையின்மை விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் விளைவாக, ரிசர்வ் வங்கியின் மாதாந்திர பாண்ட் கொள்முதல் அளவு $85 பில்லியனிலிருந்து பின்தங்கும் நிலை ஏற்படும்" என டல்லாஸ் மத்திய வங்கித் தலைவர் ரிச்சர்ட் ஃபிஷர் சமீபத்தில் கூறினார்.

செப்டம்பர் மாதத்தில், ரிசர்வ் வங்கியின் சொத்து கொள்முதல் திட்டம் அல்லது QE3 அளவு குறையகூடும் என பலர் விவதிக்கின்றனர். இதன் விளைவாக இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும் என நம்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, QE3 டேப்பரிங்க் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கலாம் என அச்சுறுத்துகிறது. இந்நிலை செப்டம்பரில் ஏற்படாவிட்டாலும், அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக, பெரும்பாலான மத்திய வங்கிகள் பின்பற்றி வந்த எளிதான பணவியல் கொள்கை மற்றும் ஈஸி லிக்விடிட்டி கண்டிஷன்கள் தங்கவிலை உயர்விற்கு காரணமாகும்.
தி ஃபெடரல் ரிசர்வ் $85 பில்லியன் மாதாந்திர சொத்து கொள்முதலில், தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்துவந்த காரணத்தால், கடந்த 3 வருடங்களாக தங்கவிலை அதிகரித்து வந்தது. சொத்து கொள்முதல் திட்டம் அடுத்த வருடத்தில் முற்றிலுமாக நீங்கிவிடும் சாத்தியம் தென்படுவதால், கண்டிப்பாக தங்கவிலையில் ஒரு மிகப்பெரியயளவில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் உண்டு. Read in English:

தங்கமே தங்கம்...! தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். 

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது....

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு... உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்!

No comments:

Post a Comment